News August 11, 2025
தென்காசியில் புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

தென்காசி மாவட்டத்தின் புதிய சார் ஆட்சியராக வைஷ்ணவி பால் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். 19 வருடங்களுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், விவசாயம் குறித்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 27, 2025
தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.
News September 27, 2025
தென்காசி: முக்கிய ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலங்களில் செப்-30ம் தேதி பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – ஈரோடு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 16846) செங்கோட்டையில் இருந்து காலை 5:10 புறப்பட்டு கரூர் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு வரை சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
News September 27, 2025
தென்காசி: உங்க மொபைல் தொலைந்துவிட்டதா..இதோ தீர்வு

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <