News August 11, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை பண்ணிட்டீங்களா?

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள <
Similar News
News August 11, 2025
செங்கல்பட்டு மக்களே! கொஞ்சம் சூதானமா இருங்க…

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க
News August 11, 2025
செங்கல்பட்டு: M.Ed. படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் (M.Ed.) 300 இடங்கள் உள்ளன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஆகஸ்ட் 11) முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20, 2025. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
News August 11, 2025
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி வாடிக்கையாளர் மையங்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் வருமானவரி அதிகாரிகள் பெயரில் பணம் பறிக்கும் கும்பல்கள் செயல்படுகின்றன. ‘மிஸ்டுகால்’ அழைப்புகள், முதலீட்டில் இரட்டிப்பு லாபம், பரிசு கூப்பன்கள் எனப் பல்வேறு வழிகளில் மோசடிகள் நடக்கின்றன. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்கள் தனிப்பட்ட தகவல்களையும், பணத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.