News August 11, 2025

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கலையரசன், 20. இவர், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வைத்து, அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார், கலையரசனை நேற்று கைது செய்தனர்.

Similar News

News August 11, 2025

விழுப்புரம் – முண்டியம்பாக்கம் ரயில் ரத்து

image

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், முண்டியம்பாக்கத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ளது, மறுமார்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆக.23 அன்று மட்டும் இந்த பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

விழுப்புரம்: உள்ளூரிலேயே வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

image

விழுப்புரத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 100 Insurance Agent பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th படித்த 18 வயது முதல் 45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

BREAKING: விழுப்புரம் மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ள மாணவர்கள் கவனமாக வரவும். வெளியே செல்லும் குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!