News August 11, 2025

இன்று முதல் இபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்

image

இபிஎஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர், 19-ம் தேதி வேலூரில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

ஜெ., போட்டோவுடன் இருந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

image

ஜெயலலிதாவை போல அரசியலில் ஆளுமை மிக்க பெண் என்ற எண்ணத்திலேயே <<17369072>>LK சுதீஷ், ஜெ.,வுடன் சேர்த்து<<>> தனது போட்டோவை பகிர்ந்ததாக பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம் தனது அரசியல் ரோல் மாடல் ஜெயலலிதாதான் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், இதனை கூட்டணியுடன் முடிச்சி போட வேண்டாம் என்றார். காலையில், அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைந்ததை மறைமுகமாக கூறவே சுதீஷ் இந்த போட்டோவை பகிர்ந்ததாக பேச்சு எழுந்தது.

News August 11, 2025

கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. நெருக்கடியில் ஹர்திக்?

image

Asia cup-ல் VC-யாக கில் நியமிக்கப்படுவது, ஹர்திக் பாண்ட்யாவுக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சூர்யகுமார் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவருக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவர் இத்தொடரில் சொதப்பினால், சூர்யகுமார் கேப்டனாகவும், கில் VC-யாகவும் நியமிக்கப்படலாம். இது ஹர்திக்குக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கலாம்.

News August 11, 2025

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை என்ன?

image

‘மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற பெயரில் ஆக.1 முதல் தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: *மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். *10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். *மாநகராட்சியின் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

error: Content is protected !!