News April 7, 2024
வேலூர்:அமமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனின் ஆணைக்கிணங்க மாநில MGR மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான சேவல். நித்யானந்தம் தலைமையில் நேற்று மாலை நெல்லூர் பேட்டையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஏசி சண்முகத்தை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டது. அப்போது நகர, மாவட்ட சார்பு அணி, நகர சார்பு அணி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.
Similar News
News November 5, 2025
வேலூர்: 3 மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

வேலூர், குடியாத்தம் தனகொண்டபல்லி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், இவரது மனைவி மதுமிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அதில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தைக்கு நேற்று (நவ.04) திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 5, 2025
வேலூரில் வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 5, 2025
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். அதேபோல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த தயாளன் மதுரை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 37 கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


