News August 10, 2025
தருமபுரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புதிய வழிகளை அறிவித்துள்ளார். 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 94981 10581 மற்றும் 63690 28922 ஆகிய வாட்ஸ்அப் எண்கள், மற்றும் ‘DRUG FREE TN’ என்ற மொபைல் செயலி மூலம் எந்த புகார்களை அளிக்கலாம். புகார் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.14) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன், தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் குமார் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 14, 2025
சருமபுரி: குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (நவ.14) வாசித்தார். பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 14, 2025
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.


