News August 10, 2025

கல்குவாரியில் மூழ்கி சிறுவர் – சிறுமி உயிரிழப்பு..!

image

மதுரை பாண்டியன் கோட்டை கல்மேடு குவாரி பகுதியில் நரிமேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி சையது அலி சஹானா மற்றும் இவரது சித்தப்பா மகனான 3 வயது சிறுவன் ஆஷிக் ராஜா ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 13, 2025

மதுரை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

மதுரை மாநகராட்சி மேயர் கணவர் GH-ல் அட்மிட்

image

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

News August 13, 2025

மதுரை: ஆக.15ல் மதுக்கடைகள் அடைப்பு

image

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று (ஆக.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வாணிபக் கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து இயக்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையம் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!