News August 10, 2025
தி.மலை கோயில் இத்தனை பழமையானதா?

தி.மலை தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியத்தில் கூட இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டைமான் இளந்திரையன் இந்த நகரத்தை ஆண்டுள்ளார். பல்லவர், சோழர் இங்கு ஆட்சி செய்துள்ளனர். சிவனின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிவன் கோயிலாக இது உள்ளது. இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது
Similar News
News August 13, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 13, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் கரியமங்கலம் விபிஆர்சி கட்டடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ஆனைவாடி சமுதாய கூடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் கேபிகே மஹால், ஆரணி வட்டாரத்தில் எம்ஆர்ஆர் மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் நாட்டேரி விபிஆர்சி கட்டடம் மற்றும் புதுப்பாளையம் கஜலஷ்மி மண்டபம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
News August 12, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.