News August 10, 2025
JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News August 13, 2025
மதுரை மாநகர் காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் இன்று (ஆக. 12) இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விபரங்களை மதுரை மாநகர் காவல் துறை அதிகாரப்பூர்வமான சமூகங்களை பக்கத்தில் விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை காவல் கட்டுப்பாட்டு அறை எங்களுக்கும் அதிகாரியின் எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க கேட்டுக் கொண்டனர்.
News August 12, 2025
BREAKING மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கைது

மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு வழக்கு தொடர்பாக மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சென்னையில் வைத்து மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
மதுரை: மகன் இறந்த செய்தி கேட்டு தாயும் உயிரிழப்பு..!

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் விசைத்தறி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் கோவிந்தம்மாள், மகனின் கையை பிடித்து கதறி அழுத நிலையில் துக்கம் தாளாமல், அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகனின் இழப்பை தாங்க முடியாமல், தாயும் உயிரிழந்த சம்பவம் அவனியாபுரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.