News August 10, 2025

நீரில் மூழ்கி சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

image

நாமக்கல், வெப்படை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்று மாலை தனது 8 வயது மகனுடன்
மேட்டுக்கடை அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, பாறையில் தேங்கி இருந்த தண்ணீரில் கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாரா விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

நாமக்கல்லில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து நாமக்கல்லில் 37 நாட்கள் கொண்ட இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆகஸ்ட் 3 ஆம் வாரம் முதல் தொடங்கியுள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 11) இதன் விலை ரூ.4.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2025

நாமக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை.. சிறப்பு SI கைது!

image

நாமக்கல், கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாரளாக மோகன் (வயது 54) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!