News August 10, 2025

ஆயுதங்கள் தயாரிக்க தடை – மாவட்ட காவல்துறை உத்தரவு

image

நெல்லை இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அரிவாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை தயாரிக்க நேற்று (ஆகஸ்ட் 9) திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

image

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடை கள் (டாஸ்மாக்) இம்மாதம் 15ம் தேதி மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக தெரிவித்தார்.

News August 13, 2025

BREAKING: நெல்லை ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு

image

நெல்லை மனோன்மணியம் பல்கலைகழகத்தில் இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதாக மாணவி குற்றச்சாட்டு. ஆளுநர் பட்டம் பெற மறுத்து அந்த மாணவி துணைவேந்தரிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News August 13, 2025

பாபநாசம் அணை நீர்வரத்து கடும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து இறங்குமுகமாக உள்ளது. இன்று ஆக. 13 காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 295 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1750 கன அடி நீர் வெளியேற்றபட்டது. அணை நீர் இருப்பு 117 அடியாக குறைந்தது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 107 அடி மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 95 அடி.

error: Content is protected !!