News August 10, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 12, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் ஈசானஓடை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரவிச்சந்திரன், தினகரன் சீனிவாசன், சேட்டு, வெற்றிவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
News August 12, 2025
திருவண்ணாமலை தடகள மாணவிகளே தயாராகுங்கள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (13-08-2025) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் திருவண்ணாமலை குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கு பெறலாம் முதல் 3- இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட உள்ளது.