News August 10, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் கோட்ட அலுவலங்களில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதியும், பள்ளிபாளையம் அலுவலகத்தில் 14ம் தேதியும், திருச்செங்கோடு அலுவலகத்தில் 20ம் தேதியும், ராசிபுரம் அலுவலகத்தில் 28ம் தேதியும், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது மின் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இத SHARE பண்ணுங்க!
Similar News
News November 7, 2025
நாமக்கல்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) நாமக்கல் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 6 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 7, 2025
நாமக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நாமக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!


