News August 10, 2025
காவல்துறை சார்பாக போதைப்பொருட்கள் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் காவலர்கள் போதைப்பொருட்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 10, 2025
அரசு கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளான எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் மாணவர் சேர்க்கைக்கு நாளை ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வும், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதுநிலை அனைத்து பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் நாராயணன் தெரிவித்துள்ளார்
News August 10, 2025
விழுப்புரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
News August 10, 2025
விழுப்புரம் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

விழுப்புரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.