News April 7, 2024
அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தது இதுக்குதான்

ரவுடிகளுக்கு பொறுப்பு கொடுக்கவே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்துள்ளதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘பாஜக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக படுத்தால் தூக்கம் வரவில்லை. அதனால் தான் திமுகவை ஆதரித்து தேர்தலில் பரப்புரை செய்து வருகிறேன். பணம், பதவி உள்ளிட்டவற்றை தருவதாகக் கூறி பாஜகவில் சேர, அழைத்த போதும் தான் செல்லவில்லை’ என்றார்.
Similar News
News January 14, 2026
Refund Scam: ₹5 கோடி சம்பாதித்த கில்லாடி

சீனாவில் 17வயது இளைஞர், இ-காமர்ஸ் தளங்களின் ரீ-பண்ட் முறையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரியளவில் மோசடி செய்துள்ளார். வாங்கிய பொருள்களை திருப்பி அனுப்பாமலேயே, அனுப்பியது போல் ஏமாற்றி, ரீ-பண்ட் பெற்றதுடன் அந்த பொருள்களை மறுவிற்பனை செய்து ₹5 கோடி சம்பாதித்தார். இதையடுத்து, ஒரு நிறுவனம் அளித்த புகாரில் மோசடி அம்பலமாக, நீதிமன்றம் சிறார் என்றும் பாராமல் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
News January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரானை விட்டு இந்தியர்கள் விரைவாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாஸ்போர்ட், குடியேற்ற ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும், எந்தவித உதவியாக இருந்தாலும் உடனடியாக தூதரகத்தை அணுகுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. +989128109115, +98912810912 உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
News January 14, 2026
ஆசிரியர் தற்கொலை.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டார். அப்போது விஷம் அருந்தியதால் அவர் உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அவர் இன்று உயிரிழந்ததால், தற்கொலை வழக்காக பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அரசுக்கு பின்னடைவாக மாறியுள்ளது.


