News August 9, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை (ம) நீர்வளத்துறை சார்பில் இன்று(ஆக.9) ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு வரும் அணைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் அறிவிப்புகளில் திட்டங்கள் குறித்தும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டறிந்தார்.

Similar News

News December 8, 2025

விழுப்புரம்: கார் ஏறி முதியவர் பரிதாப பலி!

image

சென்னை புழல் கதிர்வேட்டைச் சேர்ந்த 68 வயது சேவியர் பெர்ணான்டோ, கடந்த 1-ம் தேதி திண்டிவனம் சாரம் லேபை பகுதியில் சாலையைக் கடந்தபோது, அவர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், ஓலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டுச் சென்ற காரைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

விழுப்புரம்: பஸ்சில் மது பாட்டில்கள் கடத்தியவர்கள் கைது!

image

திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் பொம்பூர் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த தனியார் பஸ்ஸில் இறங்கிய திருவாக்கரையைச் சேர்ந்த கோபாலகண்ணன் & வி.சாத்தனூரைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோரைப் பிடித்துச் சோதனை செய்தனர். இருவரும் 44 மதுபாட்டில்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News December 8, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(டிச.07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!