News August 9, 2025
பணம் கொடுத்து ட்ரோல் செய்கிறார்கள்: ரஷ்மிகா

நடிகை ரஷ்மிகா மந்தனா, தனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது என பகீர் புகார் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இது தன்னை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News August 10, 2025
₹5 லட்சத்திற்கு ஏலம் போன கில்லின் ஜெர்ஸி

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்ததும், இரு அணி வீரர்கள் அணிந்த ஜெர்ஸி, தொப்பிகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. இதில் இந்திய அணியின் கேட்பன் சுப்மன் கில்லின் ஜெர்ஸி அதிகபட்சமாக ₹5.6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. மொத்தமாக இந்திய அணியின் ஜெர்ஸிகள் ₹33.9 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டன. இந்த பணம் ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை மூலம் பொது சேவைக்கு வழங்கப்பட உள்ளன.
News August 10, 2025
இந்தியாவிற்கு வான்வெளியை மூடியதால் ₹127 கோடி இழப்பு

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.
News August 10, 2025
விரைவில் இந்தியா – ஓமன் இடையே ஒப்பந்தம்

இந்தியா – ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இரு நாடுகளும் தங்களது சுங்கவரிகளை குறைக்கும் அல்லது நீக்கும். 2024-25 ஆண்டில் 10 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இரு தரப்பு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள், யூரியா 70% ஓமனில் இருந்து வருபவை.