News April 7, 2024

என்.ஐ.ஏ அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு ஆளுநர் கண்டனம்

image

மே.வங்கத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் தீவிரமான பிரச்சனை என அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியை சிலர் உடைத்து தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்துள்ள ஆளுநர், ‘சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்றார்.

Similar News

News August 12, 2025

தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களை அறிவித்த TNSTC

image

சுதந்திர தினம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 1,320 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூருக்கு 190 பஸ்களும், அதேபோல் 17-ம் தேதி சென்னைக்கு திரும்ப 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன. <>TNSTC<<>>-ல் புக் பண்ணுங்க.

News August 12, 2025

மொபைலை கொஞ்சம் கீழ வையுங்க!

image

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?

News August 12, 2025

சைபர் கிரிமினல்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

image

சைபர் கிரிமினல்களின் SIM கார்டுகளை உடனே முடக்க SP-களுக்கு அதிகாரமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சந்தேகத்துக்கு உரியவர்களின் லொக்கேஷன்கள், வங்கி & தொலைபேசி விவரங்களை உடனடியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம், முதல்கட்டமாக தெலங்கானாவில் அமல்படுத்தப்படவுள்ளது.

error: Content is protected !!