News August 9, 2025
கணவன் காதில் பாய்சன் ஊற்றிய மனைவி

தெலுங்கானாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. மது அடிமையான சம்பத்துக்கும், மனைவி ரமாதேவிக்கும் எப்போதும் சண்டை தான். தன் கடை வருமானத்திலேயே, ரமாதேவி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடைக்கு வரும் ராஜய்யாவுடன் கள்ள உறவு ஏற்பட, இருவரும் சம்பத்தை கொல்ல முடிவு செய்தனர். உறங்கிக் கொண்டிருந்த சம்பத் காதில், இருவரும் விஷத்தை ஊற்ற, அப்போதே அவர் உயிரிழந்தார். இருவரும் இப்போது கம்பி எண்ணுகின்றனர்.
Similar News
News August 10, 2025
வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்றை போலவே இன்றும் (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.
News August 10, 2025
பொதுமக்களுக்கு பட்டா… வந்தது புதிய அறிவிப்பு

நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரருக்கு பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
News August 10, 2025
மின்சார கட்டணம் உயருமா? SC-யின் புதிய உத்தரவு

SC-யின் புதிய உத்தரவால் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளது. மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தரவேண்டிய மொத்த நிலுவை தொகையையும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் SC உத்தரவிட்டுள்ளது. 2024 கணக்கின்படி, தமிழக அரசு ₹87,000 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் வரை தள்ளிப்போகலாம்.