News August 9, 2025

மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் பலி

image

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Similar News

News August 10, 2025

JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News August 10, 2025

அதிமுகவில் மேலும் இரு மாவட்ட செயலாளர்கள்

image

மதுரையில் அதிமுக நகர், புறநகர் மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட செயலாளராக உள்ள செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் ‘சீனியர்கள்’. இந்த 3 மாவட்டங்களை 5 மாவட்டங்களாக்கும்பட்சத்தில் பழனிசாமியின் தீவிர விசுவாசியும், மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் சரவணன் உட்பட 2 பேர் ஜாதி அடிப்படையிலும், வசதி, மக்கள் செல்வாக்கு அடிப்படையிலும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News August 10, 2025

பூஷ்ப பல்லக்கிய கள்ளழகர் புறப்பாடு

image

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கள்ளழகர் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வருகிறார். அந்த வகையில் ஒன்பதாவது நாளான நேற்று இரவு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.நேரில் பார்க்க முடியாதவருக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!