News August 9, 2025
அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து

குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து அகர ஓகை அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த பெரும் விபத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
Similar News
News August 10, 2025
திருவாரூர்: டிகிரி போதும்! மிஸ் பண்ணிடாதீங்க!

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட ரிசியூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை தமிழ்நாடு தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று திறந்து வைத்து; குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 10, 2025
மன்னார்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து கட்டப்பட்டு உள்ளது அந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருக்கும் கடைகள் ஆக. 20,28 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடைகளில் ஏலம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு.