News April 6, 2024
பதவி ஆசை கூறி பாஜகவிற்கு அழைத்தனர்

பதவி ஆசை கூறி தன்னை பாஜகவில் சேர அழைப்பு விடுத்ததாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ‘இப்போதுதான் பலர் பாஜகவில் இணைகின்றனர். ஆனால், 2014இல் பெட்ரோலியம், துறைமுக துறைகளில் முக்கிய பொறுப்பு தருவதாகக் கூறி என்னை அழைத்தனர். ஆனால், இந்த மண்ணையும், மக்களையும் நேசித்ததால் நான் அங்கு செல்லவில்லை’ எனக் கூறியுள்ளார்.
Similar News
News January 26, 2026
ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்ற விஜய்: KN நேரு

எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் எனக் கூறிய விஜய்யை அமைச்சர் நேரு மறைமுகமாக விமர்சித்துள்ளார். பட ரீலிசிற்காக Ex CM ஜெயலலிதாவிடம் விஜய்யும், அவரது தந்தையும் கைகட்டி நின்றதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று நேரு சாடியுள்ளார். மேலும், உங்களுக்கு நான் என்றைக்குமே எதிரியல்ல என ஜெயலலிதாவிடம் கூறி அழுத்தத்திற்கு பயந்த விஜய், தற்போது வீரவசனம் பேசுவதாகவும் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
கவர்னரின் தேநீர் விருந்துக்கு NO சொன்ன TN அரசு

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் RN ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழக அரசு சார்பில் CM, அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கவர்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் இருதரப்புக்கு இடையே பிரச்னை வெடித்தது. இதனிடையே CM ஸ்டாலின் மற்றும் DCM உதயநிதி தஞ்சையில் நடக்கும் திமுகவின் மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
News January 26, 2026
கரூர் விவகாரம்: விஜய்க்கு எச்சரிக்கை

விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லாததால்தான் அவருடன் யாரும் சேரவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியலில் விஜய் 0 மாதிரி என்ற அவர், தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை, ஆனால் யாருடனாவது சேர்ந்தால் அதற்கு மதிப்பு உண்டு எனவும் கூறியுள்ளார். மேலும் NDA ஆட்சியில் பிரச்னையின்றி விஜய் அரசியல் செய்ய முடியும், ஆனால் DMK ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை அவர் நினைவில் கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளார்.


