News August 9, 2025
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்

சென்னையில், பேருந்து நிலையங்கள், சாலையோர ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350719>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 10, 2025
19 மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்றன. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல், சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – சென்ட்ரல், கடற்கரை – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – கடற்கரை, சென்ட்ரல் – ஆவடி இடையே இன்று மற்றும் நாளை (ஆகஸ்ட் 10, 11) 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 10, 2025
வாரயிறுதி விடுமுறை: சென்னை மக்களுக்கு குட்-நியூஸ்

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358920>>தொடர்ச்சி<<>>
News August 10, 2025
எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358932>>தொடர்ச்சி<<>>