News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 10, 2025

வாரயிறுதி விடுமுறை: காஞ்சிபுரம் மக்களுக்கு குட்-நியூஸ்

image

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358989>>தொடர்ச்சி<<>>

News August 10, 2025

எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

image

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358984>>தொடர்ச்சி<<>>

News August 10, 2025

சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் 2/3

image

வரும் 14-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இந்த ரயில் செல்லும். மறுமார்க்கத்தில் வரும் 17ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். <<17358975>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!