News August 9, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350652>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 10, 2025
வாரயிறுதி விடுமுறை: காஞ்சிபுரம் மக்களுக்கு குட்-நியூஸ்

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358989>>தொடர்ச்சி<<>>
News August 10, 2025
எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358984>>தொடர்ச்சி<<>>
News August 10, 2025
சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் 2/3

வரும் 14-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இந்த ரயில் செல்லும். மறுமார்க்கத்தில் வரும் 17ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். <<17358975>>தொடர்ச்சி<<>>