News August 9, 2025
உழவர்சந்தைகளில் களைகட்டிய விற்பனை!

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, எடப்பாடி, இளம்பிள்ளை, ஆத்தூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட 13 உழவர்சந்தைகளில், நேற்று ஒரே நாளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 303.80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை சுமார் 72,200 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர். நேற்று மட்டும் ரூபாய் 1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
Similar News
News August 9, 2025
திருமண தடை நீக்கும் பேளூர் கோயில்!

சேலம் மாவட்டம் பேளூர் அமைந்துள்ளதுள்ளது, 1000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை வழிபட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்.
News August 9, 2025
8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும் – ஈபிஎஸ்

“திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்னும் 8 மாதத்தில் கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது குறித்து செய்தியாளர்கள் பேச்சிலேயே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அந்த 8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும். அப்போது அனைவருக்கும் தெரிவிப்போம்” என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
சேலத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை: ரூ.76,000 சம்பளம்!

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 132 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <