News August 9, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

நாகை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

நாகை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

News December 9, 2025

நாகை: பயணிகள் ரயில் ரத்து!

image

திருவாரூா் அருகே குளிக்கரை ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு நாகை வழியாக செல்லும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (76820) மற்றும் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (76819) டிச.12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் – தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

News December 9, 2025

நாகை: குட்கா கடத்தல் கும்பல் கைது

image

நாகை வெளிப்பாளையம் சிவன் கீழவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு காா்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றுள்ளது. அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார், காரில் சோதனை செய்த போது, 11 மூட்டைகளில் 128 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

error: Content is protected !!