News August 9, 2025
5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 35-45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
மாதம் 3 முறை இலவசம்.. 4-வது முறை ₹150 வசூல்.. ICICI

புதிதாக கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 முறை மட்டுமே இலவச பரிவர்த்தனை; அதற்குமேல் ₹150 வசூலிக்கப்படும் என <<17350157>>ICICI <<>>அறிவித்துள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ICICI வங்கி அல்லாத ATMகளில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதன்பிறகு, ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ₹23, நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ₹8.5 வசூலிக்கப்படும்.
News August 9, 2025
SSMB29.. இயக்குநர் ராஜமெளலி கொடுத்த மெகா அப்டேட்!

இன்று மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பட அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஏமாற்றியுள்ளார். இன்று எந்த வித அப்டேட்டும் வராது என தெளிவாக குறிப்பிட்ட அவர், வரும் நவம்பரில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என X தளத்தில் போஸ்டர் ஒன்றுடன் தெரிவித்துள்ளார். அதில், மகேஷ் பாபு கழுத்தில் உள்ள செயினில் சிவனின் திரிசூலம், உடுக்கை, காளை ஆகியவை இருக்கின்றன.
News August 9, 2025
2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்..

உங்கள் ஊரை விட்டு வெளியூரில் செட்டிலான பிறகு, அங்கே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தால் மட்டும் போதாது. பழைய ஊரின் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதும் அவசியம். பெயரை நீக்க, எலெக்ஷன் கமிஷனின் Form 7 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது உங்கள் பெயரில் போலியாக வாக்கு பதிவாகுவதை தடுக்கும். வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தீர்ப்பது மக்களின் கடமையும் கூட. SHARE IT.