News August 9, 2025
ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோ வழங்கிய Dy CM

ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை Dy CM உதயநிதி ஸ்டாலின் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பேசிய அவர், இந்தியாவிலேயே மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி கொடுத்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, மானியத்துடன் ஆட்டோ வழங்கு ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றார்.
Similar News
News August 9, 2025
சென்னையில் விஜய் கட்சிக்கு சென்றதால் வெட்டு!

கிண்டியைச் சேர்ந்த ஸ்ரீராம், TVK கட்சியின் 168ஆவது வார்டு பொருளாளர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகிரெட்டி தோட்டம் பிள்ளையார் கோயில் அருகே வைக்கப்பட்ட TVK பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதுகுறித்து சந்தோஷ் என்பவரிடம் ஸ்ரீராம் விசாரித்ததால், நேற்று (ஆகஸ்ட் 9) சந்தோஷ் நண்பர்களுடன் ஸ்ரீராமை பிளேடால் முகத்தில் கிழித்துள்ளார். திமுகவில் இருந்து TVK-விற்கு மாறியதால் வெட்டியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
News August 8, 2025
100 மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் மாணியம்

சென்னை ராயப்பேட்டையில் இன்று (08.08.2025) 100 மகளிர்களுக்கு புதிய ஆட்டோக்களை வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது அனைத்து மகளிர் ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
News August 8, 2025
அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுபிரமணியன் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், துறையின் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பங்கேற்றனர்.