News August 8, 2025
சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
இணையதளத்தில் அழைப்பு ஆட்சியர் தகவல்!

போதை இல்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் விதமாக வருகின்ற 11-ம் தேதி திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. சிஎம் காணொளி வாயிலாக உறுதியேற்கிறார். சேலத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இணையதளம் https://www.drugfreetamilnadu.tn.gov.in/ மேலும் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து உறுதிமொழி ஏற்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பெறலாம், என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 8, 2025
சேலம்: புகைப்பிடித்தால் கடும் நடவடிக்கை

சேலம் ரயில்வே பகுதிகளில் இயங்கும், ரயில்களில் பயணிக்கும் சிலர் பீடி, சிகரெட், புகைப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் சேலம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பீடி, சிகரெட், குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஎப் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் இது தொடர்பாக 139 அழைத்து புகார் செய்யலாம்.