News August 8, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.
Similar News
News December 9, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மத்தூர், சிவம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி பண்ணந்தூர், புலியூர் வாடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
ஒசூர் அருகே கணவனை கொன்ற மனைவி கைது

ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி திருணத்துக்குப் பிறகும் சூர்யாவுடன் பழங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளார். இதை முத்துலட்சுமி சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சரவணனை நேற்று (டிச.8) குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை ஓசூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.
News December 9, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


