News August 8, 2025

கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

செங்கல்பட்டு மக்களே இந்த WEEKEND பிளான் ரெடி

image

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலத்தின் கலை பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 7, 2025

செங்கல்பட்டு: முதியவரிடம் கோடி கணக்கில் மோசடி 3 பேர் கைது

image

தாம்பரத்தைச் சேர்ந்த 62 வயது சந்திரன் என்பவரிடம், ‘வங்கி கணக்கு மோசடி, டெல்லி போலீஸ் வழக்கு, டிஜிட்டல் கைது’ எனக் கூறி மிரட்டி ரூ.2.25 கோடியை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இது தொடர்பாக, ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மேலும் 3 பேர் (அக்‌ஷய் சுந்தர் ராவ், நஜ்ருல் அலி, மொபரோக் ஹூசைன்) கைது செய்யப்பட்டனர். சந்திரனிடம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

News December 7, 2025

செங்கல்பட்டு: இன்றைய ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!