News August 8, 2025

‘SIR’ குறித்து EPS வாய் திறக்காதது ஏன்? துரைமுருகன்

image

தமிழக மக்களை டெல்லியிடம் அடமானம் வைக்க EPS துணிந்துவிட்டதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது போல் TN-ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) மூலம் மத்திய அரசு, அரசியல் உரிமையை பறிக்க முயல்வதாக துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக EPS இதுவரை வாய் திறக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News August 8, 2025

விநாயகர் சதுர்த்தி.. இவற்றுக்கெல்லாம் தடை!

image

விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, *பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். *சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த தடை. *ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. *அனுமதியில்லாத இடங்களில் சிலைகளை கரைக்க கூடாது. SHARE IT.

News August 8, 2025

அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் படிக்கணும்: அமித்ஷா

image

பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க வேண்டுமெனவும், அதில் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறினார். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் விரும்புவதாகவும் விமர்சித்தார்.

News August 8, 2025

சிங்கத்தின் ஆட்டம் விரைவில்: சிம்பு படத்தின் புதிய அப்டேட்

image

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம், சிம்புவின் சம்பளப் பிரச்னை காரணமாக டிராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘தொடங்கியது.. மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும்.. சிங்கத்தின் ஆட்டம் விரைவில்’ என குறிப்பிட்டு சிம்பு, வெற்றிமாறனை டேக் செய்துள்ளார். இப்படப் பணிகள் துவங்கி விட்டது என்பதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!