News August 8, 2025
தூத்துக்குடி பூசாரி கொலை: 17 வயது சிறுவன் கைது

தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டையன் தோப்பில், ஏ.சண்முகபுரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ரவி நேற்றிரவு மர்ம நபர்களால் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, 17 வயது சிறாரை உடனடியாக கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
தூத்துக்குடி: இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க!

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் போல, அவ்வப்போது மினி வேலைவாய்ப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. வரும் ஆக. 14ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10க்கு முகாம் தொடங்க உள்ளது. சுமார் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
News August 8, 2025
தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.
News August 8, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு….

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட்-9) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் சரிசெய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.