News August 8, 2025
தடகளப் போட்டிகளில் தென்பரை மாணவர்கள் சாதனை

திருத்துறைப்பூண்டி குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்பரை உயர்நிலைப்பள்ளி பள்ளி குண்டு எறிதல் போட்டியில் அரசு மாணவி வைஷிகா முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். மேலும் தொடர் ஓட்டத்தில் சரண், விதுல், தரன், காலியாகுமார் மூன்றாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் தீபா மூன்றாம் இடமும், தடை தாண்டுதல் போட்டியில் நட்சத்திர ஓவியா மூன்றாம் இடமும் பெற்றனர்.
Similar News
News December 26, 2025
திருவாரூர் மாவட்டம் ஓர் பார்வை!

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 12.64 லட்சம்
▶️ ஆண்கள் – 6.26 லட்சம்
▶️ பெண்கள்- 6.37 லட்சம்
▶️ படிப்பறிவு – 82.86 %
▶️ மொத்த பரப்பளவு – 2,274 சதுர கி.மீ. SHARE NOW!
News December 26, 2025
திருவாரூர்: டிச.31 கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள எதாவது ஒரு ரேஷன் கடையில் டிச.31-ம் தேதி கைரேகை பதிவு செய்யுமாறு ரேஷன் கடை விற்பனையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News December 26, 2025
திருவாரூர்: கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

நீடாமங்கலம் அருகே குடிதாங்கிச்சேரியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்ரா (40). சுதாகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


