News August 8, 2025

ராமநாதபுரம்: 1000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இரட்டைஊரணி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 36 பண்டல்களில் 1000 கிலோ பீடி இலைகளை டிராக்டரில் கொண்டு வந்தனர். உச்சிப்புளி காவல்துறையினர் கடத்தல்காரர்களை மடக்க முயன்றபோது, டிராக்டர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் வருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 8, 2025

ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

image

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.

News August 8, 2025

ராமநாதபுரம்:உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சிக்கு அழைப்பு

image

முதுகுளத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 18-40 வயது வரம்பு, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மாதந்திர கல்வி உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.https://www.skilltraining.tn.gov.in என்ற லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.

News August 8, 2025

ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

image

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.

error: Content is protected !!