News August 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,470-க்கும், சவரன் ₹75,760-க்கும் விற்பனையாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News August 8, 2025
ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
News August 8, 2025
₹50,925 சம்பளம்.. மத்திய அரசில் 550 காலியிடங்கள்!

மத்திய அரசின் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 550 Administrative Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 21- 30 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்டமாக தேர்வு நடைபெறும். ₹50,925- ₹90,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
News August 8, 2025
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி.. அமைச்சர் தகவல்

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பரப்புரைக்கு இடையே <<17339627>>பிரேமலதா<<>>, LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோரை சந்தித்து அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி பேசினார். கூட்டணிக்கு அச்சாரமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதாவை சந்தித்ததாகவும், தங்களது கூட்டணியில் தேமுதிக தொடர்வதற்கு அதிமுக தயார் எனவும் வீரமணி தெரிவித்துள்ளார். சீக்கிரமே கூட்டணி முரசு கொட்டுமா?