News August 8, 2025

தூத்துக்குடி: நாய்கள் தொல்லையா.! உடனே அழையுங்கள்..

image

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*

Similar News

News August 8, 2025

தூத்துக்குடி பூசாரி கொலை: 17 வயது சிறுவன் கைது

image

தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டையன் தோப்பில், ஏ.சண்முகபுரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ரவி நேற்றிரவு மர்ம நபர்களால் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, 17 வயது சிறாரை உடனடியாக கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 8, 2025

தூத்துக்குடி: டிகிரி படித்திருந்தால் உடனடி வேலை..

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு COMPUTER OPERATOR வேலைக்கு 25 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. எதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. *வேலை தேடும் நண்பர்கள்/ உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News August 8, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் தமிழக அரசால் நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்குகொள்கிறார்கள் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி, காயல்பட்டினம், பெருங்குளம், சாத்தான்குளம், புதூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

error: Content is protected !!