News April 6, 2024
இது நீதியை விரும்பும் தேசத்தின் குரல்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது வாக்குறுதிகளின் பட்டியல் மட்டுமல்ல, அது நீதியை விரும்பும் தேசத்தின் குரல் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பதற்காக வாக்களிக்க வேண்டும் என்றார். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
Similar News
News November 11, 2025
ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?
News November 11, 2025
3 மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் பண்ணலயா.. உஷார்!

3 மாதங்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நம்பரை Recycle என்ற முறையில், Airtel புதிதாக நம்பர் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி வாங்கிய புதிய நம்பரில், முன்னர் அதை முன்னர் பயன்படுத்தியவரின் Facebook, Uber, Swiggy போன்ற அக்கவுண்டுகளில் தானாகவே Log-in செய்ய முடிவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி ஆதார், UPI அக்கவுண்டுகளின் தகவல்களும் திருடு போகும் அபாயம் உள்ளது.
News November 11, 2025
நடிகர் ஸ்ரீகாந்திடம் ED தீவிர விசாரணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் <<18225496>>ஸ்ரீகாந்த்<<>> ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் அக்.28ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இன்று ஆஜராகியுள்ள இவரிடம், போதைப் பொருள் வாங்கியது குறித்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.


