News August 8, 2025
ஆகஸ்ட் 8: வரலாற்றில் இன்று

* 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயர் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. *1942 – இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. *1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. *2014 – ஆப்பிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக பொதுநல அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது.
Similar News
News August 8, 2025
எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS

திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க பல கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாக EPS கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இதுவரை எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், EPS எந்த கட்சிகளையும் தாங்கள் அழைக்கவில்லை என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
News August 8, 2025
நகத்தில் இப்படி இருக்கா.. கவனியுங்க!

ஒருவரின் கை நகத்தின் கலரை வைத்தே அவரின் ஹெல்த் பற்றி சொல்லிவிடலாம் தெரியுமா?
✦நகத்தின் நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்னை
✦கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயாக இருக்கலாம்
✦மஞ்சள் நிறம்: தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு
✦வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது.
✦ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.
News August 8, 2025
பிரேசில் அதிபருடன் பேசிய PM மோடி

பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வாவும் PM மோடியும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அரசு வெளியிட்ட அறிக்கையில் இது பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தியா – பிரேசில் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழமான பங்களிப்பை செலுத்த உறுதி பூண்டுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார்.