News August 8, 2025
டிரம்பின் 50% வரியால் பெரும் சிக்கலில் திருப்பூர்

திருப்பூரில் இருந்து வருடத்திற்கு சுமார் ₹10,000 கோடிக்கு மேல் ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது அமலான 50% வரியால் இந்திய தயாரிப்புகளின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும். இதனால் வியட்நாம், வங்கதேசமிடமிருந்து இறக்குமதி செய்ய அங்குள்ள நிறுவனங்கள் முன்வரலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இச்சூழலால் திருப்பூர் ஜவுளித்துறைக்கு ₹12,000 கோடி வரை இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 8, 2025
செங்கோட்டையில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் PM மோடி தேசிய கொடி ஏற்றி, மக்களிடையே உரையாற்ற உள்ளார். இதனால், டெல்லி முழுவதும் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரோன் எதிர்ப்பு அமைப்பு, Facial Recognition Technology பயன்படுத்தப்பட உள்ளது. வரும் 16ம் தேதி வரை டிரோன்கள், பலூன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
ஆகஸ்ட் 8: வரலாற்றில் இன்று

* 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயர் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. *1942 – இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. *1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. *2014 – ஆப்பிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக பொதுநல அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது.
News August 8, 2025
இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சீனா

இந்திய பொருள்களுக்கு 50% வரிவிதித்த டிரம்பை, இந்தியாவிற்கான சீன தூதர் Xu Feihong சாடியுள்ளார். கொடுமைகாரர்களுக்கு ஒரு அங்குலம் கொடுத்தால், அவர்கள் ஒரு மைல் தூரம் செல்வார்களாம் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்கா வரிவிதிப்பை மற்ற நாடுகளை அழுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், ஐநா மற்றும் உலக வர்த்தக விதிகளை மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.