News August 7, 2025
அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!
Similar News
News August 8, 2025
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

*ஒரு சமூகத்தின் பெண்களின் நிலை கொண்டே அந்த சமூகத்தின் தரம் மதிப்பிடப்படும். *என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. *மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள். *உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம். *நம் வாழ்வில் கிடைக்காத பெரும் செல்வம், நாம் வீணாக கழிக்கும் ஒவ்வொரு வினாடியும்தான்.
News August 8, 2025
தனுஷின் சகோதரிகளை ஃபாலோவ் செய்யும் மிருணாள்

<<17306052>>தனுஷ் – மிருணாள்<<>> தாகூர் டேட்டிங் செய்வதாக ஒரு வாரமாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இதுவரையிலும், இது குறித்து இருவரும் எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷுன் சகோதரிகளான கார்த்திகா மற்றும் விமலா கீதாவை மிருணாள் இன்ஸ்டாவில் ஃபாலோவ் செய்வதும், அவர்களும் இவரை ஃபாலோவ் செய்வதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இருப்பினும், மேற்கூறிய ஜோடி ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.
News August 8, 2025
இந்திய அரசு vs எலான் மஸ்க்.. வெல்வது யார்?

மத்திய அரசின் சஹ்யோக் போர்டலை எதிர்த்து எலான் மஸ்கின் X, கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசிற்கு எதிரான விமர்சனங்கள், கேலிப் பதிவுகளை நீக்கச் சொல்லி அந்த போர்டல் வற்புறுத்துவதாகவும், இதனால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு, இணைய தணிக்கை நடைபெறுவதாகவும் X குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், சட்டவிரோத, தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை நீக்க அந்த போர்டல் அவசியம் என மத்திய அரசு வாதிடுகிறது.