News April 6, 2024
வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

வீரபாண்டி அருகே தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் சர்வேஷ் (36). இவர் வீரண் என்பவருடன் நேற்று இரவு வீரபாண்டி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் சர்வேஷின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு ரூ.1000 பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதையடுத்து தகவலின் பேரில் தனசேகரன் (20), சிம்பு (20) ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 4, 2025
தேனி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நகர்புற வாழ்வாதார இய்க்கம் ஆகியவை சார்பில் வருகிற நவம்பர் 8 ந் தேதி கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க மெரிக் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்து உள்ளார். வேலைநாடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க.
News November 4, 2025
தேனி: தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (45). மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முருகன், ராமசாமியின் கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் முருகன் மீது வழக்கு (நவ.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
தேனியில் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு

இந்தாண்டு நடைபெற உள்ள தேசிய இந்திய பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் தமிழக விளையாட்டு விடுதி கபடி அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.3) துவங்கியது. போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இன்று போட்டிகள் முடிவடைகிறது.


