News August 7, 2025
இளம் வில்லுப்பாட்டு கலைஞரை கௌரவித்த கலெக்டர்

நெல்லை பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி பல்வேறு கோயில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆன்மீக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகி வருகிறார். சிறு வயது முதலே வில்லுப்பாட்டு கலையை ஆர்வமாக மேற்கொண்டு வரும் கலைஞர் மாதவியை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கௌரவித்து கலையை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டினார்.
Similar News
News November 12, 2025
தாடி வளர்க்க அனுமதி கோரிய கைதியால் பரபரப்பு

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தான் தாடி வளர்க்க அனுமதிக்க வேண்டுமென சிறைக் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முக்கிய காரணங்களுக்காக நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்று சமர்ப்பித்தால் உரிய முறையில் பரிசளிக்கப்படும் என சிலை வட்டாரம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News November 12, 2025
நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

நாங்குநேரி அருகே உள்ள பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் வேன் நான்கு வழி சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்று கொண்டிருந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கால அட்டவணை வெளியீடு

தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும் உத்தரவு படியும் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஒன்று ஒன்று 2026ம் ஆண்டு தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்கான கால அட்டவணைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி வருகின்ற கணக்கெடுப்பிற்கான காலம் வாக்குச்சாவடி மறு வரையறை வாக்காளர் பட்டியல் என கால நிர்ணயம்.


