News August 7, 2025

‘அம்மா… நான் போகிறேன்’

image

கந்துவட்டி கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் வசித்துவந்த ரவிக்குமார், வட்டிக்கு ₹50,000 கடன் கேட்டுள்ளார். அதற்கு ₹15,000-ஐ பிடித்துக்கொண்டு ₹35,000 கொடுத்துள்ளனர். இதற்கு ₹1.20 லட்சம் வரை வட்டி மட்டுமே கட்டிய நிலையில், கடன் தீராத விரக்தியில், ‘நான் போகிறேன் அம்மா’ என தாய்க்கும் மனைவிக்கும் கடிதம் எழுதிவைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன சொல்ல?

Similar News

News March 7, 2026

ஈரானில் மொசாட் உளவாளி கொலை?

image

ஈரானின் QUDS படை தலைவர் இஸ்மாயில் கானியை அந்நாட்டின் புரட்சிகர காவல் படை கொன்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அவர் மொசாட்டுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2024 டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் Haniyeh இருந்த ரகசிய இடத்தில் அவர் காட்டிக்கொடுத்ததால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

News March 7, 2026

திராவிட மாடலால் ஆங்கிலம் பேசிய PM மோடி: உதயநிதி

image

சமீபத்தில் மதுரையில் நடந்த NDA மாநாட்டில் PM மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்நிலையில், அவர் TN வந்தபோதெல்லாம் ஹிந்தியில் பேசியது தப்புத்தப்பாக தமிழில் பெயர்க்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ஆங்கிலத்தில் பேசியதாகவும் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். இது தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றும், PM மோடியை ஆங்கிலத்தில் பேச வைத்தது திராவிட மாடல் ஆட்சி தான் எனவும் கூறியுள்ளார்.

News March 7, 2026

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

*அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது *சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் *எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

error: Content is protected !!