News August 7, 2025
தி.மலை: கேட்கும் செல்வத்தை அள்ளித்தரும் பெருமாள் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 8, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் நாளை ஆகஸ்ட் 8 முகாம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் செங்கம், கலசப்பாக்கம்,வந்தவாசி, தெள்ளாறு, ஆரணி, மற்றும் மேற்கு ஆரணி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப்பகுதியில் 15 துறைகள் 46 சேவைகள். முகாமில் மனு கொடுத்து பயன்பெறலாம்.
News August 8, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 07) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News August 7, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.