News August 7, 2025
மக்களின் வாழக்கை தரம் உயர்ந்திருக்கிறதா? இபிஎஸ்

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது மக்களை ஏமாற்றக் கூறும் மாபெரும் பொய் என EPS விமர்சித்துள்ளார். உண்மையிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளதா, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா என கேள்வி எழுப்பினார். இரட்டை இலக்க வளர்ச்சி என மாயத்தோற்றத்தை திமுகவினர் உருவாக்குவதாகவும் கூறினார். கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கையே காரணமென்றார்.
Similar News
News April 4, 2026
திமுகவில் இணைந்த வேட்பாளர்.. சசிகலாவுக்கு ஷாக்!

அஇபுதமமுக-வின் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளர் குமார், திமுகவில் இணைந்தது சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 நாள்களுக்கு முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் தென்னந்தோப்பு சின்னத்திற்கு குமார், தீவிரமாக ஓட்டு கேட்டு வந்தார். இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்ததுடன், அக்கட்சியின் வேட்பாளர் வசந்தவேலுக்கு ஆதரவாக பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
TN தேர்தல்.. இன்று வியூகம் வகுக்கும் மோடி

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம், பரப்புரை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதில், நயினார், வானதி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், தமிழக பாஜக வேட்பாளர்கள் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க திமுக முயற்சி

தான் MLA-வாகவுள்ள பண்ருட்டி தொகுதியில் விசிகவுக்கு வாய்ப்பளிக்க திமுக முயற்சித்தது என வேல்முருகன் கூறியுள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் இரு சமூக மக்களிடையே மோதலை உண்டாக்க திமுக திட்டமிட்டது என அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். நான் இருக்கும் வரை தமிழகத்தில் சாதிய மோதல் நடக்க விடமாட்டேன் என்றும் கூறினார். செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக தன்னை போட்டியிட சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.


