News August 7, 2025
தீர்க்க சுமங்கலி அருள் பெற பெண்கள் என்ன செய்யலாம்?

வரலட்சுமி விரதத்தன்று பெண்கள் எவ்வாறு வழிபடலாம் என்பதை பார்ப்போம். பூஜையறையில் கலசம் வைத்து அதற்கு நெய் தீபம் ஏற்றியும், அன்னைக்கு தாமரை மலர், துளசி இலை படைத்தும் வழிபடலாம். அதைப்போன்று கலசத்தை சுற்றி 8 நாணயங்களை வைத்து பூஜை செய்து அதனை பீரோவில் வைக்கலாம். மேலும், மஞ்சள் கயிறை பூஜை செய்த பின்பு பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் தீர்க்க சுமங்கலி அருள் பெற முடியுமாம்.
Similar News
News August 8, 2025
வீட்டு லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்!

வங்கிகளுக்கான RBI-யின் ரெப்போ வட்டி முன்பே குறைக்கப்பட்டாலும், பல வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு தரவில்லை. இதனால் வீட்டு லோன் எடுத்த பலரும், லோன் எடுத்தபோது இருந்த பழைய (உயர்ந்த) வட்டி விகிதத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் லோன் வாங்கிய வங்கியை அணுகி, வட்டியை குறைக்க கோரலாம். இல்லையெனில், குறைந்த வட்டி தரும் வங்கிக்கு லோனை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.
News August 8, 2025
முதியவர்களுக்காக வீடு தேடி செல்லும் ரேஷன் பொருள்கள்

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ வரும் 12-ந் தேதி CM ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 20,42,657 முதியவர்களும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2-ம் சனி, ஞாயிறுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
News August 7, 2025
ஆரஞ்ச் அலர்ட்.. நாளை கவனமா இருங்க!

தமிழகத்தில் மழை குறைந்த நிலையில், நாளை மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதனால், நாளை வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!