News August 7, 2025

₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

image

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 10, 2025

பிஹாரில் புதுவித மோசடி.. தேஜஸ்வி

image

தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் 3 லட்சம் வாக்காளர்களின் வீட்டு எண் ‘0’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். EC-யின் வேலை இங்கு பிஹாரில் பலிக்காது எனக் கூறிய அவர், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் கேலிக்கூத்தாக இல்லையா என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், புகார் தந்தால், ஆலோசனை கூறினால் EC கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News August 10, 2025

இந்த ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் Ro- Ko?

image

2027 ODI WC-ல் Ro-Ko கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், BCCI அத்தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்யும் திட்டத்தில் உள்ளது. இதனால், அக்டோபரில் தொடங்கும் ஆஸி., தொடருடன் Ro-Ko ஓய்வு பெறுவார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. இருவருக்கும் ஆஸி., மண்ணில் இதுவே கடைசி தொடராக இருக்கலாம் என்பதால், ஆஸி., கிரிக்கெட் நிர்வாகம் Special Send-off நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

News August 10, 2025

MGR குறித்து சர்ச்சை பேச்சு.. திருமா விளக்கம்

image

MGR, ஜெ., குறித்து திருமா பேசியது சர்ச்சையான நிலையில், EPS, OPS உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், MGR, ஜெ.,வை அவமதிக்கவில்லை; ஒரு ஒப்பீட்டுக்காக பேசிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திருமா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளும் இல்லை எனக் கூறிய அவர், தன் பேச்சின் முக்கிய நோக்கம் குறித்து தெளிவுப்படுத்தினார்.

error: Content is protected !!