News August 7, 2025
வேலூரில் சைபர் குற்ற வழக்குகளில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் முன்னிலையில், நேற்று (ஆக.06) சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளின் தொடர்பாக ரூ.45,83,671 பணம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை நிகழ்வில் கலந்துகொண்டார்.
Similar News
News August 8, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.7) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News August 8, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம் வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வேலூர் மாவட்டம், ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
வேலூர்: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

வேலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.